50. அப்பாவின் யதார்த்தம்
அப்பாவின் தலை தொங்கிப்போயிற்று… * நானும் மருத்துவர்களிடம் கற்றுக்கொண்டுவிட்டிருந்த அத்தனை வித்தைகளையும் அரங்கேற்றிக்கொண்டிருந்தேன்… * நாக்கை நீட்டுங்க… இதோ இங்க பாருங்க… கைய உயர்த்துங்க பாக்கலாம்… * அப்பாவின் விழிகளில் வெண்மையும் கருவட்டத்தின் கீழ் வளைவும் தெரிந்துகொண்டிருக்க அப்பாவின் தலை என் கரம் தாங்க நின்றுகொண்டிருந்தது. * இயலாமையை வெளிப்படுத்தும் பரவிய மனம் வாய்த்திராத அப்பா இப்படி சரிந்தாரேயானால் ஈகோவின் குறைந்தபட்ச ஆளுமையையும் அவரது மூளை இழந்து நிஜத்தில் கரைந்துபோய்விட்டார் என்று அர்த்தம். * டாக்டர் வருகிறவரைக்கும் […]